• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா பெயரை நீக்க கர்நாடக அரசு மனுதாக்கல் செய்யும் – ஆச்சார்யா

February 6, 2017 தண்டோரா குழு

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து ஜெயலலிதா பெயரை நீக்கும்படி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்ய உள்ளது என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை கூறியதாவது:

“ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர்-5ம் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்துவிட்டதால் வழக்கில் இருந்து அவரது பெயரை நீக்கும்படி உச்ச நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.

இதை உச்ச நீதிமன்றத்துக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். எனவே, இதற்கான சிறப்பு மனு ஒன்றை செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்.

முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இறந்து விட்டாலும் மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நீடிக்கும் . அவர்கள் மூன்று பேரும் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.”

இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.

மேலும் படிக்க