• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவி கேமரா நிறுத்தி வைக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி

March 22, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவி கேமரா நிறுத்தி வைக்கப்பட்டது என்று அப்போலோ மருத்துவ குழும தலைவர்   பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5ம் தேதி காலமானார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,

சிசிடிவி காட்சிகளை சம்பந்தமில்லாதவர்கள் பார்க்க நேரிடும் என்பதால்,ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவி கேமரா நிறுத்தி வைக்கப்பட்டது.ஜெயலலிதாவை யார் சந்திக்க வேண்டும் என உடன் இருந்தவர்கள் கூறிய நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.ஜெயலலிதா உடல்நலம் தேறி வருவதற்கு அத்தனை சிகிச்சைகளையும் அப்போலோ மருத்துவமனை செய்தது.

மேலும்,ஜெயலலிதா சிகிச்சை சம்பந்தமான எல்லா தகவலையும் ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தில் கொடுத்துள்ளோம் என்று கூறினார்.

மேலும் படிக்க