• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவுக்குப் பாரதரத்னா வழங்கக் கோரிய மனு தள்ளுபடி

January 6, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளபடி செய்தது.

மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டதாவது:

ஜெயலலிதா திரைப்படத் துறையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பல விருதுகளைப் பெற்றுள்ளார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு, தமிழக முதல் அமைச்சராகப் பதவி வகித்தார்.

அம்மா உணவகம், அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு வெள்ளிக்கிழமை காலையில் தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “யார் யாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்த நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

“இது போன்ற வழக்குகளை விசாரணைக்கு ஏற்க முடியாது” என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க