• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் வாகன விபத்தில் பலி

April 29, 2017 தண்டோரா குழு

போலீசாரால் சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவுடைய முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், ஆத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கடந்த 24ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில்,மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், 2012-ம் ஆண்டில் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கனகராஜ் சேலம் ஆத்தூரில் வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து, விபத்து தற்செயலானதா? திட்டமிடப்பட்டதா?என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க