• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் வாகன விபத்தில் பலி

April 29, 2017 தண்டோரா குழு

போலீசாரால் சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவுடைய முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், ஆத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கடந்த 24ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில்,மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், 2012-ம் ஆண்டில் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கனகராஜ் சேலம் ஆத்தூரில் வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து, விபத்து தற்செயலானதா? திட்டமிடப்பட்டதா?என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க