• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதாவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன – ஆளுநர் பெருமிதம்

January 26, 2017 தண்டோரா குழு

“மறைந்த தமிழக முதலமைச்சர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை மற்ற மாநிலங்களும் இதர நாடுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இது மகிழ்ச்சி தருகிறது” என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி, அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

“நமது முன்னோர்கள் கண்ட கனவுப்படி நாட்டை வளமாக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

மகாராஷ்டிர ஆளுநராக இருப்பதால் மும்பையில் தேசியக்கொடி ஏற்றினேன். அதனால், தமிழகத்தில் தேசியக்கொடியை ஏற்ற முடியவில்லை.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் “அம்மா உணவகம்” போன்ற பல திட்டங்கள் ஏழைகளின் சுமையைக் குறைத்துள்ளன. இந்த திட்டங்களை மற்ற மாநிலங்களும், பிற நாடுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளன. இது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தில் தொடக்கக் கல்வி பெறுவோர் 99. 85 சதவீதம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உயர்கல்வி பெறுவோரின் சதவீதம் தேசிய அளவை விட அதிகமாக உள்ளது”.

இவ்வாறு வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க