• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி வெட்டிக்கொலை

April 24, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. விடுமுறை காலங்களில் அவர் அங்கு தான் ஓய்வெடுப்பார்.

இந்நிலையில் நேற்றிரவு அங்கு காவலில் இருந்த ஓம்பகதூர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

இதையடுத்து அவரை கொன்று கொள்ளையடிக்க முயன்றார்களா அல்லது முக்கிய பத்திரங்கள் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க