August 21, 2017
தண்டோரா குழு
ஜெயலலிதாவின் ஆன்மாவே அணிகளை இணைக்க வழிவகுத்துள்ளது என்று முன்னாள் முதல்வர் ஒ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறுகையில்,
“நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க தொண்டர்களின் விருப்பத்துக்கிணங்க இணைந்திருக்கிறோம்.
இந்த இணைப்புக்கு உதவிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு நன்றி. உங்கள் அனைவரையும் மீண்டும் காண ஜெயலலிதாவின் ஆன்மா வழிவகுத்துள்ளது.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்நாள் முழுவதும் இயக்கத்துக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். அதிமுகவின் சாதாரண தொண்டனாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இன்றுடன் என் மனபாரம் குறைந்துவிட்டது” என்றார்.