November 14, 2019
கோவை ஜெம் மருத்துவமனையில் சர்க்கரை நோயை வெல்லலாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை மருத்துவமனை அரங்கத்தில் நடந்தது.
இதில் மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் பிரவீன் ராஜ் பேசுகையில், முதன் முறையாக இயற்கை மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவம் இணைந்து சர்க்கரை நோயை கையாள உள்ளோம். ஜெம் மருத்துவமனை, அவிநாசி பல்கலைக்கழகம் மற்றும் யங் இந்தியா உடன் இணைந்து உடல் பருமன் குறித்து குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவையில் உள்ள பள்ளிகளில் நடத்தி வருகிறோம். இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் அதிக உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 சதவீதம் அதிக உடல் எடையுடனும், 12.2 சதவீதம் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இன்று உடல் பருமனாக உள்ள சிறுவர்கள் நாளை உடல் பருமன் நோயாளிகளாக மாறுவதற்கான அபாயம் உள்ளது. வாழ்க்கை முறை மாற்றங்களைச் சரிசெய்ய மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையின் கூடிய முழுமையான அணுகுமுறை உதவுகிறது என்றார்.