• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ மெகா டவுன்ஷிப் திட்டம் கோவையில் ஜி ஸ்கொயர் குழுமம் தொடக்கம்

June 8, 2025 தண்டோரா குழு

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பரான ஜி ஸ்கொயர் குழுமம், ’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ என்ற மிகப்பெரும் டவுன்ஷிப் திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இத்திட்டமானது மிகப்பெரும் பரப்பளவில் வீட்டு மனைகள் மற்றும் இதர பயன்பாடுகளுக்கான அம்சங்களை உள்ளடக்கிய திட்டமாக அமையவிருக்கிறது. ராகிண்டோவிடமிருந்து 714 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருப்பதன் மூலம், இத்திட்டம் கோயம்புத்தூரை தமிழ்நாட்டின் ப்ரீமியம் தரத்திலான ரியல் எஸ்டேட் நகரங்களில் ஓன்றாக மாற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப்பெருமளவிலான முதலீடுகளில் மிக முக்கியமான ஒன்றாக அமையும்.

ஆஸ்ட்ரியா ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் (பீனிக்ஸ் மில்ஸின் துணை நிறுவனம்) சில்லறை விற்பனை செயல்பாடுகளின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளும் 9.03 ஏக்கர் திட்டம், எல் & டி நிறுவனத்தின் உலகத் தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 1,500-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கேப்ஜெமினியின் மிகப்பெரும் முதலீடு என இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமீபகால முதலீடுகளுக்குப் பிறகு ஜி ஸ்கொயரின் இந்த மாபெரும் கையகப்படுத்துதல் நிறைவுப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘த கோவை ஹில்ஸ்’ திட்டமானது தற்போது ’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ என்ற ப்ராண்ட் பெயரில் உருவாக இருக்கிறது. இந்த திட்டம், மிகப்பிரம்மாண்டமாக 714 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் முதல் கட்டமாக 406 ஏக்கர் பரப்பளவில் 3,127 டிடிசிபி மற்றும் ரேரா-வால் அங்கீகரிக்கப்பட்ட ப்ரீமியம் பிளாட்கள் இடம்பெற்றுள்ளன.இதையடுத்து மீதமுள்ள 308 ஏக்கர் பரப்பளவானது, சிக்னேச்சர் வில்லாக்கள், மற்றும் அப்பார்ட்மெண்ட் டெவலப்பர்களுடனான கூட்டு செயல்பாடுகள் அடிப்படையிலான கட்டுமானங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் வணிக நிறுவனங்களுக்கு குத்தகை விடும் கட்டிடங்கள், வணிக பூங்காக்கள், பள்ளிக்கூடங்கள்,கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள்,நிதி நிறுவனங்கள், விளையாட்டுப் பயிற்சி மையங்கள், மால்கள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் உள்ளிட்டவை தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பொருந்தும் வகையில் இங்கு கட்டமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மதுக்கரைக்கு அருகிலுள்ள

கோவைப்புதூரில், பாலக்காடு வழித்தட இடைவெளிக்கு ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே முக்கியமான பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு திட்டமானது அமைந்துள்ளது .’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’-ன் அறிமுக நிகழ்வில் பேசிய ’ஜி ஸ்கொயர்’ குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான பால ராமஜெயம் “கோயம்புத்தூரில் இந்த மாபெரும் டவுன்ஷிப் திட்டத்தை தொடங்குவது குறித்து அறிவிப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

கோவையின் மிகப் பிரம்மாண்டமான திட்டமாக 714 ஏக்கர் பரப்பளவில் 3000-க்கும் மேற்பட்ட மனைகள் இடம்பெற்று உள்ளன .எங்களது இந்த ’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ திட்டமானது, வீட்டு மனைகளுக்கான வாய்ப்புகள் அதிகமுள்ள, அவற்றுக்கான தேவைகள் அதிகரித்து வரும் நகரத்தில், வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் முன்னெடுப்பதில் நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் அறிமுகமாகிறது. ரியல் எஸ்டேட் துறையில் அதன் வளர்ச்சியை பரவலாக செயல்படுத்திவரும் ஒரு நிறுவனமாக, முக்கிய இடங்களில் ப்ரீமியம் மனைகள் மற்றும் கட்டுவதற்கு தயாராக உள்ள மனைகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள்.

கோயம்புத்தூரின் மிக துரிதமான வளர்ச்சியும் முதலீட்டாளர்களின் பெரும் நம்பிக்கையும் எங்களது வணிகத் திட்டங்களுக்கு மிகப் பொருத்தமான சந்தையாக இருந்து வருகிறது. எங்களது திட்டங்களை உத்திரீதியாக விரிவுப்படுத்தும் முயற்சியில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு, இந்த திட்டத்தின் அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி செயல்பட்டு வருகிறோம்.” என்றார்.

மேலும் படிக்க