• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிஎஸ்டி சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் கருத்தரங்கு

January 8, 2023 தண்டோரா குழு

கோவை டவுன்ஹால் அடுத்த மணிகூண்டு பகுதியில், ஜிஎஸ்டி சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில், வாங்க பழகலாம் எனும் கருத்தரங்கு நடைபெற்றது.

கோவை டவுன்ஹால் அடுத்த மணிகூண்டு பகுதியில், ஜிஎஸ்டி சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில், வாங்க பழகலாம் எனும் கருத்தரங்கு நடைபெற்றது.இந்த கருத்தரங்கில், பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த ஜிஎஸ்டி வரியின் காரணமாக என்னேன்ன இடையூறுகள் உள்ளது. என்னேன்ன நன்மைகள் உள்ளது என மாணவ மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்தார்.

கோவை மாநகரை சுற்றியுள்ள 5 கல்லூரிகளில் இருந்து சுமார் 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர் காலை 10 மணியளவில் துவங்க பட்ட இந்த கருத்தரங்கம், மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த கருத்தரங்கு வாயிலாக கோவையில் சிறந்த கல்வி சேவையாற்றிய பேராசிரியர், ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கபட்டு பெருமைபடுத்த பட்டது.

இந்த நிகழ்ச்சியில், டிஎன்ஜிஎஸ்டிபிஏ அமைப்பின் தலைவர், முஹமது அஸ்கர், துணை தலைவர்கள் ராதா கிருஷ்ணன், நல்லசிவன், மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணன், மாநில பொதுசெயலாளர் பஷூர் அலி, மாநில இணை செயலாளர் ஜாஜகான், மணியன் குமார் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க