April 10, 2019 தண்டோரா குழு
ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியதற்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்.
இந்திய சுதந்திர வரலாற்றில் தற்போது வரை யாரும் மறக்க முடியாத நிகழ்வு என்றால் அது ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் தான். 1919 ஏப்ரல் 13-ம் தேதி பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பிரிட்டிஷ் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஜெனரல் டயர் என்பவனின் உத்தரவின்பேரில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 1000 பேர் உயிரிழந்தனர்; 1500 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கிடையில், இந்த சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் ஜாலியன் வாலாபாக் சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது அரசு சார்பில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த துயரசம்பவத்திற்கு முழுமையாக மன்னிப்பு கேட்பது எனவும் மன்னிப்பு கோருவதன் மூலம் இரு நாடுகளிடையே நட்புறவு வலுப்பெறும் என எம்.பிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.