• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

38 ஆயிரம் கோடி மின் கட்டண தொகை ரசீதால் அதிர்ச்சி!

August 15, 2017 தண்டோரா குழு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் ஒருவருக்கு மின்கட்டணம் 38 ஆயிரம் கோடி என்று வந்த சம்பவம் அம்மாநிலத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் நகரில் பி.ஆர். குஹா என்பவர் வசித்து வருகிறார். அவரால் சரியாக மின் கட்டணம் கட்டாததால், அவருடயை வீட்டில் மின்சாரம் நிறுத்தப்பட்டது என்று ஜார்க்கண்ட் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துவிட்டு, அவர் கட்ட வேண்டிய தொகையின் ரசீதை அவரிடம் தந்துள்ளனர். அந்த ரசீதில் குறிப்பிட்டிருந்த தொகையை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அதில் 38 ஆயிரம் கோடி என்று குறிப்பிட்டிருந்தது.

இவ்வளவு பெரிய தொகையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் வீட்டில் 3 அறை மட்டுமே உள்ளது. 3 மின்விசிறி, 3 லைட் மட்டுமே பயன்படுத்துவோம். சில நேரங்களில் மட்டுமே தொலைக்காட்சி பயன்படுத்துவோம். அப்படியிருக்க இவ்வளவு பெரிய தொகை எங்களுக்கு எப்படி வரும்?” என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. அந்த புகாரை ஏற்ற அவர்கள் ஜார்கண்ட் மின் நிலைய அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொண்டுள்ளனர். விரைவில் அது குறித்து சரியான தீர்வு கிடைக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க