• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டு நடத்தப்படும் அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் – உடுமலை ராதாகிருஷ்ணன்

February 14, 2019 தண்டோரா குழு

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடத்தப்படும் அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. எதிர்கட்சியினரின் பல்வேறு கேள்விகளுக்கு ஆளும் தரப்பு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். மேலும், விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தானின் கோரிக்கைக்கு ஏற்ப, செஞ்சியில் உள்ள 12 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் உறுதி அளித்துள்ளார். அதைபோல், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடத்தப்படும் அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

மேலும் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் இயக்குநர் நியமிக்கப்படுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில் அளித்துள்ளார்.

மேலும் படிக்க