• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டு அறிவிப்பாணைகள் மத்திய அரசு வாபஸ்

January 24, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தமிழக சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டதால் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த இரு அறிவிப்பாணைகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி அளிக்கும் அறிவிப்பாணையை மத்திய அரசு 2016ம் ஆண்டு வெளியிட்டது. இந்த அறிவிப்பாணை 2011-ம் ஆண்டு காட்சிப்படுத்த தடை செய்யும் விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட அறிவிப்பாணையை மறுதலித்து வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ஆகும்.

தமிழகத்தில் மக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தமிழக அரசால் மத்திய அரசின் ஒப்புதலோடு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் குறித்த சட்ட முன்வடிவை (புதிய நிரந்தர சட்ட மசோதா) தமிழக அரசு சட்டப் பேரவையில் திங்கட்கிழமை நிறைவேற்றியுள்ளது.

இதனை அடுத்து, மத்திய அரசு கொண்டு வந்த இவ்விரு அறிவிப்பாணைகளுக்கும் தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இதனை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க