• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சீருடையில் உரையாற்றிய காவலர்

January 20, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான்காவது நாளாக மெரினா கடற்கரையில் நடந்து வரும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையில் பாதுகாப்பிற்காக சீருடையில் வந்த ஒரு காவலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

புது தில்லி சென்றுள்ள முதல்வர் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத்தான் திரும்ப வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுவதால் எனக்கு எந்த பயமும் இல்லை.

விவசாயத்துக்குச் செயற்கை உரங்களைப் பயன்படுத்தி மண்ணச் சாகடித்துவிட்டார்கள். தற்போது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மண்ணில்தான் நேதாஜியும் பிறந்தார். காந்தியும் பிறந்தார். காந்தி பிறந்த மண்ணு என்று ஓட்டு கேட்க வந்த மோடிக்கு அப்போது தெரியவில்லையா, விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று?

தமிழன் எப்போதும் முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டான். என் சொந்த ஊர் ராமநாதபுரம். அதுதான் என்னுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் இல்லாமல் நாங்கள் எங்கு போய் பிழைக்கச் செல்வது? நாங்கள் அமெரிக்காவா செல்ல முடியும்? இந்த போராட்டம் வெற்றி பெறும்.

இதற்கு அடுத்ததாக, மணல் கொள்ளையை எதிர்த்து நாம் போராட வேண்டும்”.இவ்வாறு உணர்வுபூர்வமாக அந்தக் காவலர் சீருடையில் போராட்டக் களத்தில் உரையாற்றினார். காவலரின் உரைக்கு வரவேற்பு தெரிவித்த மாணவர்கள் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

மேலும் படிக்க