• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்

January 19, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஐ.டி. ஊழியர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையைச் சேர்ந்த “கொவீனன்ட் கன்சல்டன்ட்ஸ்” நிறுவனம் வியாழக்கிழமை ஒரு நாள் விடுமுறை அளித்துள்ளது.இந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான ஜோசுவா மதன் விடுமுறை அறிவித்துள்ளார்.

தனது நிறுவன ஊழியர்கள் 500 பேரும் ஜல்லிக்கட்டு புரட்சிப் போராட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக விடுமுறையை அறிவித்த அவர், “ஒரு நாள் வருமானத்தை விட எனது மக்களின் போராட்டம்தான் எனக்கு முக்கியம்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க