• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“ஜல்லிக்கட்டுக்குத் தனிச் சட்டத்தைத் தமிழகம் கொண்டு இயலாது”

January 11, 2017 தண்டோரா குழு

“பிராணிகள் வதை சட்டத்திற்கு முரணாக தமிழக அரசால் எந்த சட்டமும் இயற்ற இயலாது” என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.அதே சமயம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும். அதை நிச்சயம் உறுதி செய்வோம்.அதே நேரம், பிராணிகள் வதைத் தடுப்புப் சட்டத்திற்கு எதிராக எந்த சட்டமும் இயற்ற இயலாது. கடந்த 2009-ம் ஆண்டு திமுக கொண்டு வந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தமிழக அரசால் தனியாகச் சட்டம் இயற்ற முடியாது.

அதுமட்டுமின்றி, பிராணிகள் வதை சட்டத்திற்கு முரணாக தமிழக அரசால் எந்த சட்டமும் இயற்ற இயலாது. இதற்கு முன் 2009 ல் திமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

தமிழகர்களின் கலாசாரம், பண்பாடு கட்டிக் காக்கப்படும். ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவில் தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது.

இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மேலும் படிக்க