• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீரில் நடந்த சண்டையில் 2 பேர் பலி 2 பேர் காயம்

February 4, 2017 தண்டோரா குழு

எல்லை பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.

இது குறித்து பாதுகாப்புபடை அதிகாரி கூறியதாவது:

“வட காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 4) எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.

பாரமுல்லா மாவட்டத்தில் அமர்கர் பகுதியில் தீவிரவாதிகள் ஒளிந்து கொண்டுள்ளனர் என்று தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லை பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் நடத்தினர். அந்த தேடுதலின் போது இருதரப்பினருக்கு இடையே நடந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அவர்கள் எந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.

இந்தச் சண்டையில் காவல்துறை ஆய்வாளர் மற்றும் மற்றொரு அதிகாரியும் காயமடைந்தனர். ஏகே ரக துப்பாக்கி, சாதாரண துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் சண்டை நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க