• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பான் நாட்டின் வான்வழியாக ஏவுகணை சோதனை செய்த வடகொரியா

September 15, 2017 தண்டோரா குழு

ஜப்பான் வழியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா இரண்டாவது முறையாக சோதனையை செய்தது.

சமீபத்தில் வடகொரியா ஹைட்ரோகேன் அணுகுண்டு சோதனையை நடத்தியது. இந்த சோதனைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.இதைத்தொடர்ந்து, ஐ.நா வின் பாதுகாப்பு கவுன்சில் கூடி, வட கொரியாவுக்கு பொருளாதார தடை விதித்தது.

இதற்கு பிறகு,வட கொரியா தனது ஏவுகணை சோதனையை கைவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வட கொரியா தொடர்ந்து தனது ஏவுகணை சோதனையை கைவிடாமல் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று(செப்டம்பர் 15) மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது.

இன்று சோதனை செய்யப்பட்ட ஏவுகணை வட கொரியாவின் மேற்கு கடற்பகுயிலிருந்து ஏவப்பட்டது. இந்த ஏவுகணை, ஜப்பான் நாட்டின் வான்வெளி வழியாக சென்று, எரிமிடோ தீபகற்பகத்தில் கிழக்கு பகுதியில் விழுந்தது.இதில் அங்கிருந்த துறைமுகத்திலிருந்த கப்பல்களுக்கோ அல்லது விமான நிலையங்களிலிருந்த விமானங்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை” என்று ஜப்பான் நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் தெரிவித்தார்.

மேலும் படிக்க