• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜப்பானில் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் இறக்கை உடைந்து விழுந்தது!

September 25, 2017 தண்டோரா குழு

ஜப்பானின் ஒசாகா நகரின் மீது பறந்துக்கொண்டிருந்த கேஎல்எம் விமானத்தின் இறக்கை பகுதி உடைந்து விழுந்ததில், கார் முழுவதும் சேதம் அடைந்தது.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த கேஎல்எம் ராயல் டட்ச் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம் ஆம்ஸ் டர்டாமுக்கு செல்ல, அமெரிக்காவின் கன்சாஸ் சர்வதேச விமானநிலையத்திலிருந்து, சுமார் 3௦௦ பயணிகளுடன் புறப்பட்டது.

ஆனால், எதிர்பாராதவிதமாக ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரின் மேல் பறந்துக்கொண்டிருந்தபோது, 4 கிலோ எடையுடைய இறக்கையின் ஒரு பகுதி, உடைந்து சுமார் 2௦௦௦ மீட்டர் உயரத்திலிருந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் மீது விழுந்தது. காரின் மீது விழுந்த வேகத்தில், அதன் கூரை நொறுங்கி, அதன் கண்ணாடிகள் சிதறின. கார் முழுவதும் சேதம் அடைந்தது.

இறக்கை உடைந்த சேதம் அடைந்த அந்த விமானமும் எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆம்ஸ்டர்டாம் விமானநிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க