January 1, 2019 தண்டோரா குழு
ஜன. 27-ம் தேதிக்கு முன்னரே பிரதமர் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்
தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. அவரது மரணத்தில் உள்ள சந்தேகத்தை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். மாயாவதியின் மிரட்டல், காங்., தலைமையிலான கூட்டணி உறுதியில்லாத கூட்டணி என்பதை உறுதி செய்கிறது. திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. ஜன. 27-ம் தேதிக்கு முன்னரே பிரதமர் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்