• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘ஜன கன மன’ வில் திராவிடம் என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் அழியாது – கமல்

August 10, 2017 தண்டோரா குழு

‘ஜன கன மன’ வில் திராவிடம் என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் அழியாது என முரசொலி பவள விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

திமுகவின் அதிகார்பபூர்வ பத்திரிகையான முரசொலி பத்திரிகையின் 75வது ஆண்டு பவளவிழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், முரசொலி செல்வம், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, இந்து ராம், தினமலர் ரமேஷ், விகடன் சீனிவாசன், தினமணி வைத்தியநாதன் உள்ளிட்டு பலர் பங்கேற்றுவிழாவில் பேசினார்.

அப்போது விழாவில் பேசிய கமல்,

சிறுவயது முதலே திமுக தலைவர் கருணாநிதியின் ரசிகனாக இருந்து வருகிறேன். திராவிடம் அழிந்து விடும் என பலர் கூறிவருகிறார்கள் ‘ஜன கன மன’வில் திராவிடம் என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் அழியாது. நான் பூனுலே இல்லாத கலைஞன் இந்த விழாவில் பங்கேற்பதில் என்ன ஆச்சரியம். எனக்கு தற்காப்பு முக்கியம் அல்ல தன்மானம் தான் முக்கியம் எனவே தான் முரசொலி பவள விழாவில் பேச வந்தேன் எனக் கூறினார்.இந்த விழாவில் பார்வையாளராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க