• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜனாதிபதி திரெளபதி முர்மு வருகை – கோவை மாவட்டத்தில் 6000 போலீசார் பாதுகாப்பு

February 13, 2023 தண்டோரா குழு

கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகிற 18-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடக்க இருக்கிறது.இதில் சிறப்பு விருந்தினராக, ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

ஜனாதிபதி கோவை வருகையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் காணொலி மூலம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இதில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களுடன், துறை ரீதியாக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக, தலைமை செயலர் இறையன்பு ஆலோனை நடத்தினார்.

மேலும் படிக்க