• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

36 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் மூன்று சந்திரகிரகண நிகழ்வுகள்!

January 29, 2018 தண்டோரா குழு

36 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜனவரி 31ஆம் தேதி மூன்று சந்திர நிகழ்வுகள் நடக்கவுள்ளது.

இந்த சந்திரகிரகண நாளன்று நிலவு எப்போதும் போல இல்லாமல்  தன்னுடைய வட்டத்தில் இருந்து நகர்ந்து பூமிக்கு மிக அருகில் வந்து ,மிகப்பெரிதாக காட்சியளிக்கும்.

மாதத்திற்கு இரண்டு முறை பௌர்ணமி வந்தால் அதை ப்ளூ மூன் என்போம். அது போல இந்த மாதமும் இரண்டு பௌர்ணமி வருகிறது. அந்த இரண்டாம் பௌர்ணமியன்று தான் இந்த நிகழ்வு நடக்க உள்ளது .ஜனவரி 31 அன்று நிலவு வழக்கத்தை விட 14  சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் வெளிச்சமாகவும் இருக்கும் என்று ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சந்திரகிரகணத்தை ஐதராபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,எந்த ஒரு கருவியின் துணை இல்லாமல் இதை வெறும் கண்ணிலேயே காணமுடியும். இந்த நிகழ்வை மேற்கு வட அமெரிக்கா ,ஆசியா, ரஷ்யா  மற்றும் ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களும் காண இயலும் என்று கூறப்படுகிறது. கடைசியாக இந்த நிகழ்வு டிசம்பர் 30, 1982 அன்று நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க