• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சொகுசு கார் வாங்கி ஒரு மணி நேரத்தில் விபத்தில் சேதம்

July 29, 2017 தண்டோரா குழு

லண்டனில் அதிநவீன சொகுசு கார் வாங்கி ஒரு மணி நேரத்தில் விபத்தில் சிக்கி சேதம் அடைந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் தெற்கு யார்க்க்ஷைர் என்னும் இடத்தில் பெராரி 430 ஸ்குதரியா அதிநவீன சொகுசு காரை ஒருவர் வாங்கியுள்ளார். அதன் விலை 2.2 கோடியாகும். அந்த காரை கார் கடையிலிருந்து அவர் ஓட்டி வந்துள்ளார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக, அந்த பகுதியில் மழை பெய்திருந்ததால், சாலை முழுவதும் சேதமாகியிருந்தது.அதனால், வாகனம் கட்டுப்பாட்டை மீறி,சாலையிலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திலிருந்த பாலம் அருகே விழுந்துள்ளது. காரிலிருந்த ஓட்டுநர் கீழே இறங்கிய சிறிது நேரத்தில், அந்த கார் தீ பிடித்துள்ளது.

தான் ஆசையாக வாங்கிய கார், வாங்கி ஒரு மணி நேரத்தில் விபத்துக்குள்ளாகி சுக்குநூறாக போனதை கண்டும், அந்த காரின் உரிமையாளரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த விபத்தை குறித்து அறிந்த யார்க்க்ஷைர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அந்த நவீன பெராரி கார் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதை கண்டுள்ளனர். ஆனால், அதன் உரிமையாளர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதை கண்ட அவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

மேலும் ரூ2.2 கோடிக்கு வாங்கிய அந்த புதிய கார் கடும் சேதம் அடைந்தது. அது வெறும் ரூ.50 ஆயிரத்துக்கு மட்டுமே விற்கப்பட்டது.

மேலும் படிக்க