• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்க நாசா திட்டம்

August 21, 2017 தண்டோரா குழு

உயிரினங்கள் வாழ மிக அவசியாமாக கருதப்படும் ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க அமெரிக்காவின் நாசா மையம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, வரும் 2020ம் ஆண்டு, செவ்வாய் கிரகத்திற்கு, ரோவர் என்னும் புதிய விண்கலம் ஒன்றை அனுப்பவுள்ளது. அந்த விண்கலத்தில் உயிரினங்கள் உயிர்வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய பாக்டீரியா அல்லது பாசி இனத்தை அதில் அனுப்பி வைக்கப்படும் என்று கருதப்படுகிறது.

அதோடு, பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பயன்படுத்தப்படும் ராக்கெட் எரிபொருளாகவும் உயிரினங்கள் சுவாசிக்கவும் ஆக்சிஜன் பயன்படும். அந்த சோதனை வெற்றிபெற்றால், எதிர்காலத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு செவ்வாய் கிரகம் தகுதியான இடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பூமியின் வளிமண்டலத்தில் 21 சதவீதம் ஆக்சிஜன் அளவை ஒப்பிடும்போது செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் 0.13 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே உண்டு.

இந்நிலையில் 2020-ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு புதிதாக ஒரு விண்கலம் அனுப்புகிறது. அத்துடன் பாக்டீரியா அல்லது பாசி இனங்கள் அனுப்பப்படுகின்றன. அங்கு இவை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க