• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுகாதார குழு தலைவர் ஆய்வு

June 1, 2023 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சியின் பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி 80 வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றுவரும் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி மற்றும் வகுப்பறைகளில் தரைத்தளம் டைல்ஸ் பதிக்கும் பணியினை கோவை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளிகள் திறக்கும் முன் டைல்ஸ் கொண்டு தரைத்தளம் அமைக்கும் பணியினை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி உதவி பொறியாளர் விமல் ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க