• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்வபுரம் பகுதியில் வீட்டின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது

December 1, 2021 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் பகுதியில் வீட்டில் சுற்று சுவர் இடிந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. நேற்று மாலை கோவை மாநகர் முழுவதும் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இந்நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில் வீட்டில் சுற்று சுவர் இடிந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம் போயர் வீதி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் குடியிருந்து வருகிறார்.

இன்று காலை 6 மணியளவில் ராஜேஸ்வரி வீட்டில் உறங்கி கொண்டிருக்கும் போது திடீரென வீட்டில் பக்கவாட்டில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் வெளிப்புறத்தில் இருந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் கூட்டம் கூட்டம் கூடியது அப்பகுதி மக்கள் மழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாக தெரிவித்தனர் மேலும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்க