• Download mobile app
26 Oct 2025, SundayEdition - 3546
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் படுகாயம் !

June 3, 2017 தண்டோரா குழு

திருவாரூரில் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போது போன் வெடித்துச் சிதறியதில் சச்சின் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.

அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர் சச்சின். இவர் திருவாரூர் அருகே உள்ள தனது உறவினர் குணசேகரன் என்பவரின் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருவாரூர் அருகே முகந்தனூர் என்ற இடத்தில் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது உயர்ரக (ஆப்பிள்)செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தீடிரென செல்போன் வெடித்துச் சிதறியது. இதில் அவருக்கு முகம், தாடை,கன்னம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுக் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க