• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செல்போன் விளையாட்டை தந்தை கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை

October 18, 2021 தண்டோரா குழு

கோவையில் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி சுப்பம்மாள் நகரை சேர்ந்தவர் சுதாகர்(41). கூலி தொழிலாளி. இவரது மகள் ஹரிணி(16). ராம்நகரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சுதாகர் தனது மகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க புதிய ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தார். ஆனால் ஹரிணி படிப்பில் கவனம் செலுத்தாமல் நீண்ட நேரம் செல்போன் விளையாட்டில் கவனம் செலுத்தி வந்ததாக தெரிகிறது.

இதைப்பார்த்த சுதாகர் தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த ஹரிணி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க