September 29, 2021
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் விஜயன் (45). இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இந்நிறுவனத்தில் சாந்திஸ்வரன், பார்த்திபன் ஆகியோர் டெலிவரி ஊழியராக கடந்த பிப்ரவரி மாதம் முதல் வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து வாடிக்கையாளர்கள் ஆன்லைன் நிறுவனங்களில் ஆர்டர் செய்து வாங்கும் செல்போன்களை டெலிவரி செய்யாமல், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்துள்ளனர். இதுவரை அவர்கள் இருவரும் ரூ.4.40 லட்சம் மதிப்பிலான 49 செல்போன்களை டெலிவரி செய்யாமல், மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விஜயன் சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் சதீஸ்வரன், பார்த்திபன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.