• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்போன்களை டெலிவரி செய்யாமல் மோசடி கூரியர் நிறுவன ஊழியர்கள் 2பேர் மீது வழக்கு

September 29, 2021 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் விஜயன் (45). இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இந்நிறுவனத்தில் சாந்திஸ்வரன், பார்த்திபன் ஆகியோர் டெலிவரி ஊழியராக கடந்த பிப்ரவரி மாதம் முதல் வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து வாடிக்கையாளர்கள் ஆன்லைன் நிறுவனங்களில் ஆர்டர் செய்து வாங்கும் செல்போன்களை டெலிவரி செய்யாமல், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்துள்ளனர். இதுவரை அவர்கள் இருவரும் ரூ.4.40 லட்சம் மதிப்பிலான 49 செல்போன்களை டெலிவரி செய்யாமல், மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விஜயன் சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் சதீஸ்வரன், பார்த்திபன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க