• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்போனுக்கு பதிலாக‌ உப்பை அனுப்பிய பிளிப்கார்ட் ஊழியர்கள்!

June 17, 2017 தண்டோரா குழு

செல்போனுக்கு பதிலாக‌ உப்பை அனுப்பிய பிளிப்கார்ட் ஊழியர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நாட்டின் முன்னணி ஈகாரமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் பெங்களூரை தலைமையாகக் கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்கிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிளிப்கார்ட் ஆன்லைன் நிறுவனத்தில் ஜெய்கணேஷ் மற்றும் சாம் திவாகர் ஆகியோர் டெலிவரி மேனாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பிளிப்கார்ட்டில் போலி பெயரில் இல்லாத முகவரியை கொடுத்து 6 மொபைல் போன்களை ஆர்டர் செய்துள்ளனர்.

ஆனால் வாடிக்கையாளர்கள் செல்போனை வாங்க மறுத்து விட்டதாக கூறி அந்த பார்சல்களை பிளிப்கார்ட் நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். அந்த பார்சல்களில் செல்போனுக்கு பதிலாக டம்மி செல்போனையும், கல்உப்பு பொட்டலங்களையும் வைத்து பார்சலை பிரிக்காதது போல் வடிவமைத்து அனுப்பியுள்ளனர்.

இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டில் இந்த மோசடி நடந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க