• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செயல்படாத கணக்குகளில் ரூ.25 ஆயிரம் கோடி டெபாசிட்

January 10, 2017 தண்டோரா குழு

செயல்படாத வங்கிக் கணக்குகளில் ரூ.25 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, வருமானவரித் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை கூறியதாவது:

“2௦16 நவம்பர் 8ம் தேதி பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசாங்கம் அறிவித்தது. அதன் பிறகு வங்கிகளில் மட்டும் கணக்கில் வராத 3 முதல் 4 லட்சம் கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பண மதிப்பிழப்பு அறிவிக்குப் பிறகு 60 லட்சம் வங்கிக் கணக்குகளில் தலா ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 9 ம் தேதி முதல், வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.10,700 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பல கணக்குகளில் ரூ.16 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. செயல்படாத வங்கி கணக்கில் மட்டும் ரூ. 25 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

மேலும் படிக்க