• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செயல்படாத கணக்குகளில் ரூ.25 ஆயிரம் கோடி டெபாசிட்

January 10, 2017 தண்டோரா குழு

செயல்படாத வங்கிக் கணக்குகளில் ரூ.25 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, வருமானவரித் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை கூறியதாவது:

“2௦16 நவம்பர் 8ம் தேதி பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசாங்கம் அறிவித்தது. அதன் பிறகு வங்கிகளில் மட்டும் கணக்கில் வராத 3 முதல் 4 லட்சம் கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பண மதிப்பிழப்பு அறிவிக்குப் பிறகு 60 லட்சம் வங்கிக் கணக்குகளில் தலா ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 9 ம் தேதி முதல், வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.10,700 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பல கணக்குகளில் ரூ.16 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. செயல்படாத வங்கி கணக்கில் மட்டும் ரூ. 25 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

மேலும் படிக்க