கோவையில் செப்டிக் தொட்டிக்குள் தவறி விழுந்த துப்புரவு பணியாளர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை 100அடி சாலையில் மலையாள சமாஜ் எதிர்புறம் உள்ள வீட்டில் செப்டிக் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஈடுபட்டிருந்தார்.அப்போது,எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.உடனே சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது,மகேந்திரன் தொட்டிக்குள் விழுந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து மகேந்திரனை உடனே தொட்டிக்குள் இருந்து மீட்டனர்.ஆனால் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தார்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !
நாடு தழுவிய ஐ கேர் மான்ஸூன் சர்வீஸ் கேம்ப் இசுசு மோட்டார்ஸ் இந்தியா நடத்துகிறது
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு