• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை டி.பி சத்திரத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

October 27, 2017 தண்டோரா குழு

சென்னையில் போலீசாரின் தீவீர வேட்டையின் எதிரொலியாக டி.பி சத்திரத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் டி.பி.சத்திரம்,அயனாவரம், கீழ்பாக்கம்,ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவல் வந்தது.இதனையடுத்து கீழ்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில்,கீழ்பாக்கம் உதவி ஆணையர் அரிக்குமார் தலைமையில் டி.பி சத்திரம் ஆய்வாளர் தயாளன் ஆகியயோர் கொண்ட குழுவினர் டி.பி சத்திரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் போலீஸ் வாகனத்தை கண்டு ஓடினான். அவனை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அவன் டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்த சந்திரன்(எ)உஸ்(23) என தெரியவந்தது.

மேலும்,அவனிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்தப்பட்ட விசாரணையில் அவனது கூட்டாளிகள் லோகநாதன் மற்றும் துரைராஜ் அந்த பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து கூட்டாளிகளை பிடிக்க சென்ற போது லோகநாதன் மட்டும் போலீசாருக்கு பயந்து தலைமறைவானான்.மேலும், துரைராஜிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசாரின் இந்த துரித நடவடிக்கைக்கு மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பாராட்டினார்.

மேலும் படிக்க