• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவலர்களே வழிப்பறியில் ஈடுபட்ட அவலம்

August 8, 2017 தண்டோரா குழு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு காத்திருப்பு அறையில் ரயிலுக்காகக் காத்திருந்தார். அப்போது தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் இருதயராஜ், அருள்தாஸ், ராமலிங்கம் ஆகிய மூவரும் அவரை மிரட்டி அடித்து அவரிடம் இருந்து பணமும், செல்போனும் பறித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே ரயில் நிலைய காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பயணி புகார் அளித்ததன் அடிப்படையில் அந்த 3 காவலர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அதன் பின் வழிப்பறி செய்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க