• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை உட்பட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ அலுவலகம் !

September 29, 2020 தண்டோரா குழு

சென்னை உட்பட நாட்டின் மூன்று நகரங்களில் புதிதாக என்.ஐ.ஏ அலுவலகம் அமைக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதலை அளித்துள்ளது.

என்.ஐ.ஏ எனப்படும் தேசிய விசாரணை முகமை பயங்கரவாத செயல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்டது.கவுஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னோ, ராய்பூர், சண்டிகர் என நாட்டின் ஒன்பது நகரங்களில் என்.ஐ.ஏ அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சியில் என்.ஐ.ஏ. அமைப்பின் கிளை அலுவலகங்களைத் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மத்திய அரசின் இந்த முடிவு குறிப்பிட்ட மாநிலங்களில் பயங்கரவாத தடுப்பு விசாரணையைத் துரிதப்படுத்த உதவும். பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் என்.ஐ.ஏ. விசாரணைத் திறனை வளர்த்தெடுக்கவும், குற்றங்களின் தடயங்களை விரைவில் சேகரிக்கவும் என்.ஐ.ஏ. அலுவலகம் இந்த மாநிலங்களில் இருப்பது உதவிகரமாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க