• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் மழை, மக்கள் மகிழ்ச்சி

June 6, 2017 தண்டோரா குழு

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது மழை பெய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

தமிழகத்தில் கடந்த மாதம் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதன் பின் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனிடையே இன்னும் ஓரிரு நாளில் பருவமழை தொடங்கம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி ,அடையாறு, பெசன்ட் நகர், அசோக் நகர், பாரிமுனை, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், பட்டினப்பாக்கம், ராயப்பேட்டை போன்ற பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் தவித்து வந்த சென்னை மாநகர மக்கள் இந்த மழை காரணமாக மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க