April 11, 2018
தண்டோரா குழு
ஏப்ரல் 20-ம் தேதி சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில்,நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியின் போது தீவிர போராட்டம் நடத்தப்பட்டது.பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தான் நேற்று போட்டி நடைபெற்றது.இந்நிலையில் சென்னையில் நடைபெற உள்ள போட்டிகள் அனைத்தையும் வேறு மாநிலங்களுக்கு மாற்றுவது குறித்து மத்திய உள்துறை செயலகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.இதனால் சென்னையில் நடைபெறவிருந்த கொச்சி, விசாகபட்டினம் அல்லது கர்நாடக மாநிலத்திற்கு ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில்,சென்னையில் வரும் 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை துவங்குவதாக இருந்தது.ஆனால், டிக்கெட் விற்பனையை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.