• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் இருந்து புதிய விமான சேவை – ஏர் இந்தியா

August 23, 2017 தண்டோரா குழு

சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு புதிய விமான சேவையை தொடங்கப் போவதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து ஏர் இந்தியா விமான நிறுவன இயக்குனர் கேப்டன் அருள்மணி கூறுகையில்,

“பெரிய நகரங்களுடன் சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்க வேண்டும்,
அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யும் வகையில் நியாயமான கட்டணத்தில் விமானங்கள் இயக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளதால்,இந்த சேவையை தொடங்கவுள்ளோம்.

மேலும் இந்த விமான சேவையை ஏர்இந்தியாவின் துணை நிறுவனமான ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு வருகிற 30-ந் தேதி முதல் தினசரி விமான சேவையை தொடங்கவுள்ளோம்.இந்த விமான சேவையில் 70 பயணிகள் பயணம் செய்யும் வகையில் சிறிய ரக விமானம் இயக்கப்பட உள்ளது.

இந்த விமான சேவை ஒரு நாளையில் ஒரு நகரத்திற்கு ஒரு முறை மட்டுமே அளிக்க இயலும் எனவும்,மேலும் சிறிய ரக விமானங்கள் வந்த பின்னர் காலை, மாலை என தினமும் இரண்டு முறை விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க