• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் இருந்து உரிய அனுமதி இன்றி பணியாளர்களை கோவை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியதால் GRT நகைக்கடைக்கு சீல் !

June 20, 2020 தண்டோரா குழு

சென்னையில் இருந்து உரிய அனுமதி இன்றி பணியாளர்களை கோவை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியதால் GRT நகைக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

கோவை கிராஸ்கட் ரோட்டில் GRT நகைக்கடை செயல்பட்டு வருகிறது. சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அங்கு பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து நகை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை அங்கு சென்ற போலீசார், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சென்னையில் பணியாற்றிய 30க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஊரடங்கு காரணமாக கோவையில் உள்ள ஜிஆர்டி நகைக்கடையில் பணி புரிவதற்காக அனுமதியின்றி அழைத்து வரப்பட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அந்நிறுவனத்தின் 3 தளங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட 30 பேரையும் பரிசோதிக்க மருத்துவர் குழு முடிவு செய்துள்ளது. இதனால் 30 ஊழியர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அரசு வழிகாட்டுதலை மீறி அதிகமான பணியாளர்களை கொண்டு GRT நிறுவனம் இயங்கியதால் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு கடைக்கு காவல்துறையினர் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும் படிக்க