May 4, 2021 தண்டோரா குழு
மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மதுரவாயல் பகுதியில்
உள்ள அம்மா உணவகத்திற்குள் புகுந்த திமுகவினர்,அங்கிருந்த அம்மா உணவகத்தின் பெயர் பலகைகளை பிடுங்கி, நடுரோட்டில் எறிந்து உடைத்து போட்டனர்.பின்னர் இனி அம்மா உணவகம் என்ற பெயரெல்லாம் கிடையாது என்று ஆவேசமாக கூறியபடி சென்றனர்.இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில்,உணவகத்தின் பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் பொருத்தவும், 2 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.