• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையிலிருந்து கோவை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று

May 26, 2020 தண்டோரா குழு

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த 24 வயது இளைஞருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை துவங்கியது.இதையடுத்து, கோவைக்கு சென்னை,டெல்லி,பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து பலர் விமானம் மூலம் நேற்று மொத்தம் 360 பயணிகள் வந்தனர்.விமான நிலையத்தில் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சோதனை முடிவுகள் தெரியவந்தது.

IMG-20200525-WA0096

இந்நிலையில்,சென்னையில் இருந்து
இண்டிகோ விமானம் மூலம் கோவை வந்து தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டது.எனினும் அந்த இளைஞர் உடன் வந்த மற்ற பயணிகளுக்கு தொற்று இல்லாத நிலையில் அவர்களை 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில்,கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் சென்னை நோயாளியாக கருதப்பட்டு அங்குள்ள பட்டியலிலேயே அவர் சேர்க்கப்படுவார் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

மேலும் படிக்க