• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையிலிருந்து கோவை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று

May 26, 2020 தண்டோரா குழு

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த 24 வயது இளைஞருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை துவங்கியது.இதையடுத்து, கோவைக்கு சென்னை,டெல்லி,பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து பலர் விமானம் மூலம் நேற்று மொத்தம் 360 பயணிகள் வந்தனர்.விமான நிலையத்தில் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சோதனை முடிவுகள் தெரியவந்தது.

IMG-20200525-WA0096

இந்நிலையில்,சென்னையில் இருந்து
இண்டிகோ விமானம் மூலம் கோவை வந்து தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டது.எனினும் அந்த இளைஞர் உடன் வந்த மற்ற பயணிகளுக்கு தொற்று இல்லாத நிலையில் அவர்களை 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில்,கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் சென்னை நோயாளியாக கருதப்பட்டு அங்குள்ள பட்டியலிலேயே அவர் சேர்க்கப்படுவார் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

மேலும் படிக்க