• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செட்டிபாளையம் பகுதியில் விதி முறைகளை மீறி செயல் பட்டுவரும் கல் குவாரியை மூடக் கோரி மனு

December 23, 2019 தண்டோரா குழு

கோவை செட்டிபாளையம் பகுதியில் விதி முறைகளை மீறி செயல் பட்டுவரும் கல் குவாரியை மூடக் கோரி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஓராட்டுகுப்பை கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்திற்கு அருகில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி கடந்த சில மாதங்களாக இயங்கி வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் இந்த கல் குவாரியால் அப்பகுதி கிராம மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், இந்த குவாரியை மூட வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் சுமார் 100 பேர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது, குடியிருப்பு பகுதியில் குவாரி அமைந்துள்ளதால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும்,விளைச்சல் முழுவதிலும் தூசி பரவி விடுவதால் விவசாயம் செய்ய முடியாமல் சிரம்மப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.மேலும் குவாரியில் வெடி வைப்பதனால், அருகில் உள்ள வீடுகள் சேதமடைவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் குவாரியை மூட அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க