May 19, 2019 தண்டோரா குழு
சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எலச்சிபாளையம் 37-வது எண் உடைய வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று நடந்து வருகிறது. இந்த 4 தொகுதிகளில் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இன்று காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில்,சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எலச்சிபாளையம் 37-வது எண் உடைய வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் 1 மணி நேரமாக வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து,மாற்று இயந்திரத்தை கொண்டு வந்து வாக்குப்பதிவை
நடத்த தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.