• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூர் எலச்சிபாளையம் 37-ம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்

May 19, 2019 தண்டோரா குழு

சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எலச்சிபாளையம் 37-வது எண் உடைய வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று நடந்து வருகிறது. இந்த 4 தொகுதிகளில் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இன்று காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில்,சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எலச்சிபாளையம் 37-வது எண் உடைய வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் 1 மணி நேரமாக வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து,மாற்று இயந்திரத்தை கொண்டு வந்து வாக்குப்பதிவை
நடத்த தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க