April 13, 2019 தண்டோரா குழு
4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல்18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 21 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் சேர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் காலமானார். இதையடுத்து, காலியாக உள்ள பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்தது.
இதனால், 4 தொகுதிகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற தேர்தலுடனேயே வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.இதனையடுத்து, நாடாளுமன்ற தேர்தலின் 7-வதுகட்ட வாக்குப்பதிவு நாளான மே 19-ம் தேதியன்று சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதைப்போல்,வேட்பு மனு தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஏப்ரல் 29-ம் தேதியாகும். ஏப்ரல் 30-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் மே 2-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. 4 தொகுதிகளிலும் மே 19-ம் தேதியன்று பதிவாகும் வாக்குகள், மே 23-ம் தேதி எண்ணப்பட்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 4 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன், சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் எம்.சி சண்முகையா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.