• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூர் அருகே 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று

September 6, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான் பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9,10,11,12 மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ரேண்டம் முறையில் கொரொனா சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ரேண்டம் முறையில் கொரொனா சோதனை நடத்தப்பட்டதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.இதனையடுத்து அவர்கள் 3 பேரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று(6.9.21) பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துவதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சுல்தான் பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் 33 மாணவர்களுக்கு சோதனை செய்ததில் மூன்று மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் 3 மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவ மாணவர்களுக்வு சுகாதாரத்துறையினர் இன்று கொரொனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

தொற்று ஏற்பட்ட மாணவர்கள் 3 பேருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க