• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் இரண்டு நாட்கள் பிரச்சாரம்

May 4, 2019

சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் இரண்டு நாட்கள் சூலூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக இன்று இரவு கோவை வரும் அவர், நாளை காலை 7.30 மணிக்கு இருகூர் பேரூராட்சி ஞாயிறு சந்தையில் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். பின்னர், மாலை 5 மணிக்கு தென்னம்பாளையம் ஊராட்சியிலும், 5.30 மணிக்கு வாகராயம் பாளையம் ஊராட்சியிலும், மாலை 6 மணிக்கு கருமத்தம்பட்டி பேரூராட்சியிலும், 6.30 மணிக்கு சோமனூரிலும், இரவு 7 மணிக்கு சாமளாபுரம் பேரூராட்சியிலும், 7.30 மணிக்கு சூலூர் பேரூராட்சியிலும், 8 மணிக்கு கண்ணம்பாளையம் பேரூராட்சியிலும், 8.30 மணிக்கு பாப்பம் பட்டி பிரிவிலும் பிரச்சாரம் செய்கிறார்.

நாளை இரவு கோவையில் உள்ள லி மெரிடியன் ஓட்டலில் தங்குகிறார். பின்னர், நாளை மறுநாள் 2-வது நாள் பிரச்சாரமாக, அன்று மாலை 5 மணிக்கு பாப்பம்பட்டியில் பிரசாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின், சுல்தான் பேட்டையில் பிரசாரத்தை முடிக்கிறார்.

மேலும் படிக்க