May 10, 2019 தண்டோரா குழு
சூலூரில் வியாழக்கிழமை பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ 1 கோடியே 98 லட்சத்து 6400 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
சூலூர் வேளாண்மை பல்கலைக்கழக வரைகலை அதிகாரி ரவி மூர்த்தி தலைமையிலான பறக்கும்படை யைச்சேர்ந்த அதிகாரிகள் சூலூர் அருகே சோளக்காட்டுப்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கட்டுகட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அதில் ரூபாய் ஒரு கோடியே 98 லட்சத்து 6400 ரூபாய் இருந்தது தெரியவந்தது. இந்த பணமானது கோவை புலியகுளத்திலிருந்து வாகராயம்பாளையம் ஏ.டி.எம் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த வேனில் வந்தவர்கள் கூறினர்.
எனினும் உரிய ஆவணங்கள்
இன்றி கொண்டு செல்லப்பட்டதால் அதனை பறிமுதல் செய்து சூலூர் தேர்தல் நடத்தம் அலுவலர் எஸ்.பாலகிருஸ்ணன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் ஜெயராஜிடம் ஒப்படைக்கப்படைத்தனர்.
பின்னர் இதனை பறிமுதல் செய்து சூலூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.